உடல் நலக்குறைவால் மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டிய காவலர்கள்...

உடல் நலக்குறைவால் மறைந்த காவலர் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டிய காவலர்கள்...

மதுரை மாநகர் தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் பழனிவேல்நாதன் கடந்த 03.10.20ம்தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். 2003 பேட்ஜ் பழனிவேல்நாதன் அவர்களின் குடும்பத்தார்,குழந்தைகள் மற்றும் பெற்றோரின்  எதிர்கால நலன் கருதி 2003 பேட்ஜ் உதவும் கரங்கள் குழுவின் மூலம் மாநில அளவில் திரட்டப்பட்ட நிதி (4985× ரூ.500/-) ரூ 24,92,500/-ல் இன்று 29.11.2020 ஞாயிறு மதியம் 12.00 மணியளவில் மகன் தீரஜ் (வயது 12) பெயரில் எல்.ஐ.சியில் ரூபாய் 9,61,946 + ரூபாய் 43,288-GST) ஆக மொத்தம்ரூ 10,05,234/-யை அவரது 21-வது வயதில் ரூபாய்19,42,660/- கிடைக்கும் வகையில் முதலீடு செய்யப்பட்டும்,மகள் ஸ்ரீநிதி (வயது 8)  பெயரில் எல்.ஐ.சியில் ரூபாய் 9,62,476 + ரூபாய் 43,331-GST) ஆக மொத்தம் ரூபாய் 10,05,787/-யை அவரது 20-வது வயதில் ரூ 20,67,520/- கிடைக்கும் வகையில் முதலீடு செய்யப்பட்டும்,மீதமுள்ள தொகையில் மனைவி திருமதி.ராதா பெயரில் கனரா வங்கி சேமிப்புக் கணக்கில் 
ரூ.2,87,479/-ம், அமரர் பழனிவேல்நாதன் அவர்களின் தாயார் திருமதி. நாகேஸ்வரி மற்றும்  தந்தை திரு.கணேசன்  ஆகிய இருவரிடமும்  ரொக்கமாக
தலா ரூபாய்.1,00,000 வீதம் ஆக மொத்தம். ரூ.2,00,000/-ம் ,மனைவி ராதா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய மூவருக்கும் வருடத்திற்கு ரூ.3,00,000/-க்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் மூன்று வருடங்களுக்கு  ஸ்டார்ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டு முதல் வருடத்திற்கான பிரிமியம்  
ரூ.9,100/-க்கு மருத்துவகாப்பீடு செய்யப்பட்டதற்கான காப்பீட்டு பத்திரம்  மற்றும்  எல்.ஐ.சி.பண முதலீட்டு ரசீதுகள் 2003 உதவும் கரங்கள் குழு மற்றும் மதுரை மாநகர் உதவும் கரங்கள் நண்பர்கள் சார்பில் நேரில் வழங்கப்பட்டது.