கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ பசுமை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்...

கூடங்குளம் காவல் ஆய்வாளர்  ஜான் பிரிட்டோ பசுமை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்...

கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஏற்கனவே ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.ஊரடங்கை அமல்படுத்தியும் பொதுமக்களின் விதிமீறல் காரணமாக  கட்டுக்குள் வராத கொரோனா தாக்கத்தால் தளர்வுகளின்றி ஒருவாரகால  முழுஊரடங்ககை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் ஆய்வாளர் திரு ஜான் பிரிட்டோ மற்றும் ராதாபுரம் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் திரு. வள்ளிநாயகம் தலைமையில் , கொரோனா தொற்று ஊரடங்குகாலத்தில் வாழ்வாதாரம் பாதித்த ராதாபுரம் பஞ்சாயத்து பசுமை பணியாளர்கள்   20 பேருக்கு காவல் நிலையத்தில் வைத்து அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள்  வழங்கப்பட்டது.

சிறப்பு நிருபர்...