கொரோனா தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப துவக்கி வைத்தார்...

 கொரோனா தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன  பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப துவக்கி வைத்தார்...

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் இன்று

29 .4 .2021 காலை  சென்னை மெரினா காந்தி சிலை அருகில் போக்குவரத்து (கிழக்கு மாவட்டம்) காவல்துறையினரின்  கொரோனா தடுப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன  பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் துவக்கிவைத்தும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கி கபசுர குடி நீர்  கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் திருமதி. பவானீஸ்வரி  இ கா ப. இணை ஆணையர் திருமதி செந்தில்குமாரி இ.கா ப (போக்குவரத்து தெற்கு).துணை ஆணையர்கள் காவல் அதிகாரிகள் மருத்துவர்கள் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.