வருமா பதவி உயர்வு! ஏக்கத்தில் 6 ஏடிஜிபிக்கள்?
வருமா பதவி உயர்வு! ஏக்கத்தில் 6 ஏடிஜிபிக்கள்?
1986ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜாபர்சேட், ஸ்ரீலட்சமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா, தமிழ்செல்வன், ஆஷிஷ்பெங்க்ரா ஆகிய 6 பேரும் தற்போது தமிழக காவல்துறையில் ஏடிஜிபிக்களாக உள்ளனர். தற்போது 6 பேருக்கும் டிஜிபி அந்தஸ்து வந்துவிட்டது. இவர்களுக்கு கீழ் நிலையில் பதவி உயர்வு லிஸ்டில் இருந்த எஸ்பி, டிஐஜி, ஐஜிக்களுக்கு உரிய நேரத்தில் பிரமோஷன் வந்து விட்டது. கடந்த 2016ம் ஆண்டு டிஜிபி அந்தஸ்தை எட்டிய 6 பேருக்கும் இரண்டாண்டுகள் ஆகியும் டிஜிபி பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஐபிஎஸ்கள் வட்டாரத்தில் சர்ச்சையான கருத்தாக வலம் வருகிறதாம். ஆனால் அது தொடர்பான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.


Comments (0)
Facebook Comments (0)